உள்ளூர் செய்திகள்

திருநள்ளாறு பதிகம்

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்க, திருநள்ளாறு நள்ளாற்று ஈஸ்வரரையும், போகம் ஆர்த்த பூண்முலையாளையும் மனதில் நினைத்து ஓத வேண்டிய பதிகம் இது.போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்தநாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே.ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி, அணியிழைஓர்பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்தமான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கைநால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலேமல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடிநீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றைநாறுதாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே.திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளேநஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே.சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்சுட்டுமாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர்பால் மதியம் சூடி,நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி'அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்எண்ணல்ஆகா உள்வினை' என்று எள்க வலித்து இருவர்நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே.மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனேநாசம் செய்த நம்பெருமான்; மேயது நள்ளாறே.தண்புணலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்லபண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.