உள்ளூர் செய்திகள்

மூடத்தனத்திற்கு இடம் தராதே

* எப்போதும் உண்மை பேசுங்கள். * நற்செயலில் மட்டும் ஈடுபடுங்கள். * கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். * அன்பு, அருள், இரக்கம் கொண்டவன் தெய்வீக இயல்பை பெறுகிறான்.* கடவுளை வணங்காவிட்டால் அருள் உணர்வு இல்லாமல் போகும்.* ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர். * பசித்தவருக்கு உணவளிப்பதோடு உதவியும் செய்யுங்கள். * முற்பிறவியின் புண்ணியத்தால் தான் மனிதப்பிறவி கிடைத்துள்ளது. * கற்கண்டை ருசித்தவன் கருங்கல்லை விரும்பாதது போல கடவுளை அறிந்தவன் மற்றதை விரும்ப மாட்டான். * எல்லாம் வல்ல கடவுளை அறிந்தால் கவலை, துன்பம் நேராது. * கையில் ஜபமாலையும், வாயில் மந்திரமும் இருந்தால் போதுமா... கடவுளை மனம் நாட வேண்டும். * வஞ்சகர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்!* நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படக் கூடாது. * தானம் கொடுப்பவரை ஒருபோதும் தடுக்காதீர். எச்சரிக்கிறார் ராமகிருஷ்ணர்