நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்
* உனக்கேற்ற நல்ல காலம் வரும். அப்போது தான் முயற்சியில் வெற்றி பெறுவாய். அதுவரை பொறுமையாக இரு.* வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். அதை கடந்து செல்.* கேட்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று நம்பாதே. * நீ செய்யும் செயல்கள் அனைத்தும், நிழல்போல உன்னை தொடரும். * மனதில் இருப்பதை சொல். இல்லாவிட்டால் மவுனமாக இரு. * ஒரு விஷயத்தை யார் சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம். * பிறரிடம் உள்ள குறைகளை பார்க்காதே. உன்னிடம் உள்ள குறைகளை கவனி. * உன்னை நேசிக்க கற்றுக்கொள். பிறரை வெறுக்கமாட்டாய். * எண்ணத்தால் கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காதே. * நல்ல மனிதனாக வாழ்ந்தால் இயற்கையே உனக்கு துணை நிற்கும். * ஆசையே துன்பத்திற்கு காரணம். முடிந்தவரை அதை தவிர்த்திடு. * உலகில் எப்போதும் உண்மை ஒன்றே நிலைத்திருக்கும். * தன்னிடம் உள்ள அதிகாரத்தால் காரியம் சாதிப்பவன் நல்ல மனிதனாகவோ, நீதிமானாகவோ இருக்க முடியாது.* எதிரிக்கும் நல்லதை செய். உனக்கு நன்மை வரும். * அதிகமாகப் பேசுவதால் மட்டுமே நீ அறிஞனாக முடியாது.* தக்க சமயத்தில் உனக்கு உதவி செய்பவனே நண்பர்களில் சிறந்தவன். * மனதை கட்டுப்படுத்து. இல்லையென்றால் அது உன்னை கட்டுப்படுத்தும். என்கிறார் புத்தர்