வேண்டும் குழந்தை மனசு
* கவலைகளை விட்டு குழந்தை போல மகிழ்ச்சியுடன் இரு.* இயற்கையை மதித்து வாழ்வது கடவுளை வழிபடுவதற்குச் சமம். * பாடுபட்டு சேர்த்த பணத்தில் தர்மம் செய்வதே உண்மையான மகிழ்ச்சி. * பிறரிடம் ஆறுதல் தேடுவதை விட மனதை சீர்படுத்துவது நல்லது. * இடைவிடாமல் கடவுளை தியானித்தால் தீய எண்ணம் விலகும். * மகிழ்ச்சியான வாழ்விற்கு மனக் கட்டுப்பாடு அவசியம். * மனநிறைவு என்பது பணம் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது. * கடவுள் நம்மை பார்க்கிறார் என்ற நம்பிக்கையுடன் வழிபடு. * வாழ்வு என்பது காலத்தின் கையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.* எல்லா உயிர்களிலும் கடவுள் குடியிருக்கிறார். அதை யாரும் உணர்வதில்லை. * ஒவ்வொரு படைப்பிலும் கடவுளின் ஒழுங்குமுறையை காணலாம். * நிம்மதியாக வாழ மனிதனுக்கு பரந்த மனம் அவசியம். * எந்த பிரச்னைக்கும் தீர்வுண்டு என்பதை உணர்ந்தால் மனம் வருந்தாது. * லட்சியத்தில் உறுதி கொண்டவனுக்கு மனதில் தெளிவு இருக்கும்.நெறிப்படுத்துகிறார் தாகூர்