உள்ளூர் செய்திகள்

கடமையில் கண்ணாக இரு

* பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாதே. கடமையில் மட்டும் கண்ணாக இரு. * நீ பெரிய சாதனைகளை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார். * யாரிடம் உண்மை, அன்பு உள்ளதோ அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. * பிறருக்கு உதவி செய்யும் நிலையில் நீ இருந்தால், அதுவே கடவுள் உனக்கு கொடுத்த நல்ல வாய்ப்பு. * முதலில் பணிவை கற்றுக்கொள். கட்டளையிடும் அதிகாரம் தானாகவே வரும்.* உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமை உள்ளவனாகவே மாறுவாய். * பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. நீ பிறருக்கு கொடுப்பதே பெருமை. * எப்போதும் ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடு. உன் எதிர்காலம் சிறப்பாக அமையும். * பிறர் செய்யும் துன்பத்தை விட, உனக்கு நீயே செய்யும் துன்பமே கொடியது. * நல்ல மனம் கொண்டவர்களே கடவுளை பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். * பூமியைப்போல யார் பொறுமையாக இருக்கிறாரோ, அவரை உலகம் மதிக்கும். * பெற்றோரை சந்தோஷமாக வைத்திரு. அப்படி செய்தால் கடவுளும் சந்தோஷப்படுவார். * தன்னம்பிக்கை ஒன்றே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை வரவழைக்கும்.* சுயநலம் ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். * பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவதே நல்ல வாழ்க்கை. சுயநலமாக இருப்பது மரணத்திற்கு சமம். எச்சரிக்கிறார் விவேகானந்தர்