சுகமாக வாழ...
UPDATED : டிச 26, 2019 | ADDED : டிச 26, 2019
டிச.30 ரமணர் பிறந்த நாள்* எண்ணம், சொல், செயலால் கடவுளைச் சிந்திப்பவன் சுகமாக வாழ்வான். * நல்லவர்களின் நட்பை நாடினால் மனதிலுள்ள அறியாமை நீங்கும்.* கடவுளின் கையிலுள்ள கருவி என்ற உண்மையை நாம் உணர்ந்தால் ஆணவம் மறையும். * கடவுளிடம் சரணடைந்தால் வாழ்வு நலமாக அமையும். * கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார். * வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக இல்லாமல் இதயத்தில் இருந்து வர வேண்டும். * அலை பாய்வது மனதின் இயல்பு. அதை தியானத்தின் மூலம் வசப்படுத்த முடியும். * விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும். * நான் யார் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேயிரு வழி புலப்படும். * பொறுமை இருந்தால் மட்டுமே மனக்கட்டுப்பாடு சாத்தியம்.* எல்லா இடங்களிலும், செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது. * பக்தியின் உயர்ந்த நிலை மவுனம். * கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரைச் சரணாகதி அடைய தகுதியானவன். வழிகாட்டுகிறார் ரமணர்