கணபதியே வருவாய்... அருள்வாய்...
ஹிந்து மதத்தில் முதற்கடவுள் விநாயகர். இவரைப் பற்றி நிறைய விஷயங்கள் உண்டு. அவற்றில் சில, * எந்த செயலை தொடங்கினாலும் முதலில் இவரை வணங்கினால் எல்லாம் வெற்றியே. * குழந்தையாக இருந்தாலும் பக்தர்களை உயர்த்துவதில் முதல்வராக இருப்பவர் இவர். * யானையின் தலை, பெரிய வயிறு, உடம்பைக் கொண்டவர். இதனால் இவருக்கு 'ஸ்துால காயர்' என்ற பெயர் உண்டு. * குழந்தைச்சாமியான இவரை வழிபட்டால் படிப்பு நன்றாக வரும். புத்தி வளரும். * சந்திரன், கடல், யானையை பார்த்தாலே மகிழ்ச்சி வரும். இதனால்தான் இவரும் யானை முகத்தோடு காட்சி தருகிறார். * இவரை மட்டுமே முதற்கடவுளாக வழிபடும் சமயத்திற்கு 'காணபத்தியம்' என்று பெயர்.* சிவபெருமானின் படை, பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர். * இவரது உதவியால் வள்ளியை திருமணம் செய்தார் முருகன். எனவே இவரை வணங்கினால் திருமணம் கைகூடும். * மஞ்சள் பொடி, களிமண், சாணி என எளிமையான பொருட்களில் பிடித்துவைத்து பூஜை செய்யலாம். * சிதறு தேங்காய் இடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் இடுவது ஆகியவை இவருக்கு மட்டுமே உரியவை. இவ்வாறு செய்தால் நாடிகளின் சலனம் மாறும். மனதில் தெய்வீகமான மாறுதல் உண்டாகும்.* எழுதும் விஷயம் 'சுழித்து'ப் போகாமல் இருக்க, முன்னாடி பிள்ளையார் சுழியிடுவது அவசியம். * உன்னிடம் நல்ல மனம், இரக்க குணம் இருந்தாலே போதும். இவரை சந்தோஷப்படுத்தலாம். * விநாயகரை வணங்கினாலே சிவபெருமான், பார்வதிதேவியின் அருள் கிடைத்துவிடும். வரவேற்கிறார் காஞ்சி மஹாபெரியவர்