உள்ளூர் செய்திகள்

திருப்தியே பெரும் செல்வம்

* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். * பாவத்தின் திறவுகோல் ஆசை. * ஞானத்தின் திறவுகோல் அன்பு.* மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும்,* சரி செய்யவும் தியானமே வழி.* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன்.* ஆசையை ஒழித்தால், தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை. * எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.* தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.* உடல், நாக்கு, மனம் மூன்றையும் அடக்கியாள்பவனே உண்மையான அடக்கம் கொண்டவன். * ஒருவனுக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் அவனவன் செயல்களே காரணம். * அன்பே உலகின் மகாசக்தி. இதை அறிந்தவன் வாழ்வே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். * தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து கவலைப்படுவது அறிவுடைமையாகாது.தெளிவுபடுத்துகிறார் புத்தர்