உள்ளூர் செய்திகள்

சிலையும் நீயே... சிற்பியும் நீயே...

* தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்தத் தகுதியானவன்.* தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.* நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் செய்யும் ஆற்றல் நமக்கு இருக்கிறது.* இந்த பிறவிலேயே கடவுள் தன்மையை அடைவதே வாழ்வின் குறிக்கோள்.* கடவுள் நம்மோடு எப்போதும் இரண்டறக் கலந்திருக்கிறார். அவரை விட்டு நாம் விலகுவதில்லை.* துாய்மையானவர்கள், நல்லவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும் பாக்கியம் பெறுவர். * கடவுளை உணர்ந்த ஞானிகளை உலக நடப்புகள் சிறிதும் பாதிப்பதில்லை. * மனம் நுட்பமாகும் போது ஆன்மிக அறிவுரையின் உண்மை விளங்கும்.* சுயநலமின்றி எந்த நேரமும் பணிபுரிபவனே கர்மயோகி.* மிகப் பெரிய உண்மை இதுவே... வலிமை தான் வாழ்வு, பலவீனமே மரணம்.* பலவீனத்திற்கு பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது மட்டுமே. விளக்கம் தருகிறார் விவேகானந்தர்