உள்ளூர் செய்திகள்

கிளியால் எழுந்த கோயில்

ஒருமுறை வேட்டைக்குச் சென்ற தொண்டைமான் சக்கரவர்த்தி. திருப்பதி மலைமீது ஏறினார் அங்கு பஞ்சவர்ண கிளி ஒன்றைக் கண்டார். அதைப் பிடிக்க முயன்ற போது, 'வெங்கடேசா... கோவிந்தா' என்னும் திருநாமத்தை சொல்லியபடி பறந்தது. மன்னரும் அதைப் பின்தொடர்ந்தார். திருப்பதி கோயில் அருகிலுள்ள சுவாமி புஷ்கரணி என்னும் குளத்தை அடைந்ததும் கிளியைக் காணவில்லை. குளக்கரையில் ஏழுமலையான் சிலையாக நின்று அருள்புரிவதைக் கண்ட மன்னர் அதிசயித்தார். கிளியாக வந்தது கடவுள் என்பதை அறிந்த தொண்டைமானே கோயிலைக் கட்டினார்.