உள்ளூர் செய்திகள்

மகாமக குளத்தில் அம்பாள்

கும்பகோணத்தில் மகாமகம் நடக்கும் போது 15 கோவில்களில் இருந்து சுவாமி எழுந்தருளல் நடக்கும். இதில் 15 கோவில்களில் இருந்து சிவன் எழுந்தருள்வார். இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து மட்டும் காளிகா பரமேஸ்வரி அம்மன் (காமாட்சி) குளக்கரைக்கு எழுந்தருள்வாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் ஆடி கடைசி வெள்ளியன்று இங்கு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படும்.