மஞ்சப்பால்
UPDATED : ஜூலை 26, 2024 | ADDED : ஜூலை 26, 2024
மாரியம்மனுக்கு ஆடிச்செவ்வாய், வெள்ளியன்று கூழிடுவர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் நாடு செழிக்க மழை பெய்யும். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்மனுக்கும், சிம்ம வாகனத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு 'மஞ்சப்பால்' என்று பெயர். மஞ்சப்பால் அபிஷேகம் செய்யும் கன்னியருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும்.