உள்ளூர் செய்திகள்

நாகாத்தம்மன்

அம்மன் வழிபாட்டில் புற்று வழிபாடும் ஒன்று. பாம்பு புற்றை 'புற்று மாரியம்மன்' என அழைக்கிறோம். ஆடி செவ்வாய், வெள்ளி அன்று புற்றுக்கு முன் பால், பொங்கல் இடுவர். இதனால் நோய்கள் குணமாகி ஆயுள் பெருகும். நாகாத்தம்மன் என்ற பெயரில் பாம்பு அம்மனை கிராமங்களில் வழிபடுகிறார்கள்.