நல்வாழ்விற்கு...
UPDATED : ஆக 13, 2024 | ADDED : ஆக 13, 2024
தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால் வெம் தரணிமுதல்கோளை வன்தீவினைப் பேயோடு வென்று குலாவுவன் காண்வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி அப்பால்வேளை நல்கிப் பல் உலகோரும் வாழச் செய் மின்கொடியே.ஒளி வீசும் கொடி போன்றவளே. உயிர்களுக்கு நல்வாழ்வு தரும் மகாலட்சுமியே. நெடியவனான திருமாலை வாள் போன்ற கண்களால் மயக்குபவளே. உன் திருவடிகளை என் தலை மீது வைத்து தீவினையைப் போக்கினால் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்.