வீடு கட்ட...
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
சொந்தமாக வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது! ஆனால் வீடு கட்ட தொடங்கும் பலர், ''பணம் புரட்ட படாதபாடு பட்டேன். கட்டட வேலை எப்பதான் முடியுமோன்னு தெரியலை' என புலம்பும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாவதுண்டு. பணப்பிரச்னை இன்றி வீடு கட்டி குடியேற விரும்புபவர்கள் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி மீது ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தை படிப்பது நல்லது. முடியாவிட்டால் பின்வரும் ஒரு பாடலை தினமும் 12 முறை சொல்லலாம். திங்கள் தோறும் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வது சிறப்பு. நன்றுடையானை தீயது இலானை நரை வெள்ளேறுஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானைசென்று அடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.