வாழ வைப்பாள் வராகி
UPDATED : டிச 20, 2024 | ADDED : டிச 20, 2024
கிராமங்களில் சப்தமாதர் அல்லது ஏழுகன்னிகள் வழிபாடு நடக்கும். சப்த மாதர்களில் ஒருவராகத் திகழ்பவள் வராகி. பன்றி முகத்துடன் கைகளில் கலப்பை, உலக்கையுடன் இருக்கும் இவளே விவசாயத்தை காப்பவள். தமிழக நெற்களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் வராகியம்மன் சன்னதி உள்ளது. ஆனி அமாவாசையை ஒட்டி ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி நடக்கும். அப்போது நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்வர்.