உள்ளூர் செய்திகள்

துளையுள்ள விதை

துளசி, ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால் இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லோரும் எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் கடவுளே இப்படி செய்திருக்கிறார். ஜாவா தீவு, நேபாளம், இந்தியாவில் இமயமலையின் அடிவாரம், பெங்களூரு பகுதிகளில் ருத்ராட்ச மரம் வளர்கிறது. நோயை போக்கும் தன்மை இதற்குண்டு. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள் பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். சூடு தணியும்.