ஒரே நாளில்...
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
மகாசிவராத்திரியன்று நடந்தவை இவை. * படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் மூவரும் சிவனருள் பெற்றனர்.* இந்திரன் தேவலோகத்தின் அதிபதியானார்.* குபேரர் செல்வத்தின் அதிபதியானார்.* சிவனின் உடலில் இடது பாகத்தைப் பெற்றாள் பார்வதி.* தவமிருந்த அர்ஜுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் கிடைத்தது. * சிவனுக்கு கண்களை அளித்தார் கண்ணப்பர்.* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவன்.* பிரம்மா, மகாவிஷ்ணு இருவரும் சிவனின் திருமுடி, திருவடியைத் தேடினர்.