உள்ளூர் செய்திகள்

ஜபிக்கும் முன்...

* காலை, மாலை, மாதப்பிறப்பு, சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, கிரகண நேரத்தில் செய்யும் ஜபத்திற்கு நிறைய பலன் உண்டு.* சாணம் மெழுகிய இடம், மாட்டுத் தொழுவம், கிணறு, ஆற்றங்கரை, கோயில் வளாகம், துளசி மாடம், வில்வ மரத்தடி, மகான்களின் சமாதிகளில் ஜபியுங்கள். * தினமும் 21, 54, 108 என்ற எண்ணிக்கையில் ஜபம் செய்தால் புண்ணியம் தலைமுறைக்கும் தொடரும். * காயத்ரி ஜபம் செய்ய மறக்கவோ, மறுக்கவோ கூடாது -காஞ்சி மஹாபெரியவர்* ஜபத்தின் மகிமையை நன்கறிந்தவர்களில் சிறந்தவர் -மகரிஷி வசிஷ்டர் * மனம், உடல் துாய்மை இல்லாமலும், ஈடுபாடு இல்லாமலும், கோபத்துடன் ஜபம் செய்பவன் நரகத்தை அடைவான் -பிதாமகர் பீஷ்மர்