சித்தன் வாழ்வு
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
பழநிக்கு 'பொதினி' என்றும் பெயருண்டு. ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் கொண்ட முருகன் இங்குள்ள குன்றின் மீதேறி நின்றார். அந்தக் குன்று தான் 'பொதினி'. இப்பகுதியை 'ஆவி' என்னும் வேளிர் தலைவன் ஆட்சி செய்ததால் 'ஆவினன்குடி' எனப்பட்டது. தவமுனிவரைப் போல ஆண்டிக் கோலத்தில் முருகன் இருப்பதால் இத்தலத்திற்கு 'சித்தன் வாழ்வு' என்றும் பெயருண்டு.