ஐயப்பன் அவதரித்தது ஏன்
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
ஹரியாகிய மகாவிஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவபெருமானுக்கும் தெய்வக் குழந்தையாக 'ஹரிஹர புத்திரன்' அவதரித்தார். அவரே பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார். புலிப்பாலுக்காக காட்டுக்கு சென்ற அவர், அங்கு முனிவர்களுக்கு இடையூறு செய்த மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்தார். அவதார நோக்கம் நிறைவேறியதும் சபரிமலையில் ஐயப்பனாக கோயில் கொண்டார்.