உள்ளூர் செய்திகள்

பண்டி பிரசாதம்

அசுரர்களான மது, கைடபர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டவர் ஹயக்ரீவ மூர்த்தி. குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இவர் கல்வி வளம் தருவதால் 'வித்யாராஜன்' எனப்படுகிறார். இவரது பக்தரான வாதிராஜர் பிரசாதமாக கடலைப்பருப்பு, வெல்லம், நெய், தேங்காயால் செய்த 'ஹயக்ரீவ பண்டி' யை படைப்பார். குதிரை வடிவில் ஹயக்ரீவர் தோன்றி கால்களை வாதிராஜரின் தோள் மீது வைத்தபடி புசிப்பார். மீதியை வாதிராஜர் பிரசாதமாக உண்பார்.