உள்ளூர் செய்திகள்

வேண்டாமே வரதட்சணை

திருமணம் என்றால் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். அதிலும் மணமகன் வீட்டார் வரதட்சணை, சீர்வரிசை நிறைய கேட்கிறார்கள். தற்காலத்தில் பெண்ணின் பெற்றோர் படிப்புச் செலவு மட்டுமின்றி உணவு, உடை என அன்றாட வாழ்வுக்கே அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் திருமணத்தை நடத்த பெண்ணின் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர். எனவே மணமகன் வீட்டார் எளிமையாக திருமணத்தை நடத்த முன்வர வேண்டும். வரதட்சணை வாங்கினால் தான் மதிப்பு என கருதக் கூடாது. இதனால் சமூக தர்மம் கெடாமல் இருக்கும். திருமணத்திற்கு உதவிய புண்ணியமும் சேரும்.