உள்ளூர் செய்திகள்

தவிட்டு முதியம்மன்

கேரள மாநிலம் கொடுங்கல்லுார் பகவதியம்மன் கோயிலில் உள்ள ஒரு அரசமரத்தின் கீழ் 'தவிட்டு முதியம்மன்' என்னும் அம்மன் அருள்புரிகிறாள். இவள் மீது அரிசியுடன் தவிடு கலந்து துாவி விவசாயிகள் வழிபடுகின்றனர். இதனால் கால்நடைகள் நோயின்றி வாழும். பால் சுரப்பு அதிகமாகும்.