உள்ளூர் செய்திகள்

சாப்பிட்டால் பலனுண்டு!

விரதம் என்றால், காலை முதல் மறுநாள் காலை வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்கிறது சாஸ்திரம். இந்த விதி சஷ்டி, கார்த்திகை, ஏகாதசி, பிரதோஷம் போன்ற அனைத்து விரதங்களுக்கும் பொருந்தும். ஆனால், பசி தாங்க முடியாதவர்கள், நோயாளிகள் விரதம் இருந்தால் சில உணவு வகையைச் சாப்பிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், கிழங்குவகைகள், நெய், பால், தெய்வத்திற்கு படைக்கப்பட்ட உணவு போன்றவற்றை விரதநாளில் அளவோடு சாப்பிடலாம். மகாபாரதம், உத்யோகபர்வம் ஸ்லோகம் ஒன்றில் இந்தத் தகவல் உள்ளது.