உள்ளூர் செய்திகள்

மறந்துவிட்டீர்களா! மாற்று வழியிருக்கு!

தாய், தந்தைக்குரிய திதி நாட்களில் தீர்த்தக்கரைக்குச் சென்று பிதுர்க்கடன் செய்வது மிகவும் அவசியம். திதிக்குரிய நாளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், உடல் நலக்குறைவு, பிறப்பு, இறப்பு ஆகியவற்றால் உண்டாகும் தீட்டு, திதியை மறந்து விடுதல், வெளியூர், வெளிநாட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் பிதுர்க்கடன் விட்டுப் போய் விடுகிறது. இவ்வாறு விட்டுப் போனால், அடுத்த பிதுர்க்கடன் கொடுக்கும் வரை செய்யும் தெய்வ வழிபாட்டுக்கு பலன் இல்லை. எனவே, இதற்காக அடுத்த ஆண்டு வரை காத்திராமல் தேய்பிறை அஷ்டமி, ஏகாதசி, அமாவாசை ஆகிய ஏதாவது ஒருநாளில் விட்டுப் போனதைச் செய்து விட வேண்டும். பிறப்பு, இறப்பு தீட்டினால் தவறியவர்கள், தீட்டு கழிந்த மறுநாள் திதி கொடுக்க வேண்டும்.