உள்ளூர் செய்திகள்

திருமண யோகம் வந்தாச்சு!

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் குருபலம் இருந்தால் தான் திருமணயோகம், மழலைச்செல்வம், தனலாபம், நல்ல புத்தி, அந்தஸ்து அனைத்தும் உண்டாகும். ஸ்தான பலத்தைக் காட்டிலும் பார்வை பலத்தால் அதிக நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் இவர். ஜோதிடப்படி நவக்கிரகங்களில் ஐந்தாம் இடத்தை வகிக்கிறார். சனி, கேது, ராகு போன்ற தீய கிரகங்களால் உண்டாகும் கெடுபலன்கள் குருவின் பார்வையால் நீங்கும். ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும், குரு ஆட்சி பெற்றாலும் தர்மசிந்தனை, ஒழுக்கம், நீதிநெறி தவறாமை ஆகிய நற்குணங்கள் உண்டாகும். மேஷ வீட்டில் குரு நட்புத்தன்மை பெறுகிறார். அதனால் சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசியினரை 5,7,9 பார்வையால் பார்க்கிறார். இந்த ராசியினருக்கு திருமணம் தடையின்றி நடக்கும். குழந்தை இல்லாமல் வாடுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் வியாழக்கிழமையில் விரதம் இருக்க குருபகவானின் அருளால் நற்பலன் பெறலாம்.