உள்ளூர் செய்திகள்

அரிசி நைவேத்யம்

பொதுவாக கோவில்களில் கடவுளுக்கு சாதமே நைவேத்யமாக படைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் என்ற கிராமத்தில் உள்ள காமாட்சி கோவிலில் அம்மனுக்கு அரிசியை நைவேத்யமாக படைக்கின்றனர். இதற்காக பெண்கள் வீட்டில் குத்திய கைக்குத்தல் அரிசியை காணிக்கையாக வழங்குகின்றனர். இந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு மட்டுமே அணிவிக்கப் படுகிறது. இந்த மஞ்சளை கோவிலுக்குள்ளேயே தயாரித்து அம்மனுக்கு சாத்த வேண்டும் என்பது நிபந்தனை.