ஆப்பிரிக்காவில் ஆன்மிகம்
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பது அவ்வையார் வாக்கு. இதனை குறிக்கோளாக கொண்டு கடல் கடந்து வாணிபத்திற்கு சென்ற இந்தியர்கள் அங்கு கோயில்களை நிறுவி ஆன்மிகத்தை வளர்த்தனர். சிவ வழிபாட்டின் கலாசார சுவடுகள் இன்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள கானா, டோகோ பகுதிகளில் காணப்படுகின்றன. அங்குள்ள அத்வாரா குகையில் சிவலிங்கம், நந்தியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு வாழும் கிராமத்தினர் வீடுகளில் முன்பு திரிசூலம் பதித்த அடையாளம் காணப்படுகிறது. இதன் மூலம் அங்குள்ள சிவ வழிபாட்டின் சிறப்பை அறியலாம்.சிவன் கோயில் ஹிந்து மதத்தின் சிறப்பை இந்தியா, வெளிநாடுகளில் பரப்பிய விவேகானந்தரை போல தென்னாப்பிக்காவில் ஆன்மிக பணி செய்தவர் கானாநந்தா சுவாமி. இவர் அங்கு வாழும் மக்களுக்கு ஸனாதன தர்மத்தின் சிறப்பை எடுத்துக்காட்டியவர், அங்குள்ள பல குடும்பங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அவர் ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும் ஆன்மிகத்தை பரவச்செய்தார். அங்குள்ள மக்களுக்கு தர்மத்தினை போதித்தார். தென்னாப்பிரிக்காவில் அவர் கட்டிய சிவன் கோயில் பிரபலமானது. இங்கு வேதமந்திரம் முழங்கியும், லிங்காஷ்டகம், ஆதித்யஹிருதயம் பாடியும் சிவபெருமானை போற்றுகின்றனர். பெண்கள் துர்கை சூக்தம் பாடி அம்மனை வழிபடுகின்றனர். அனுமன் மந்திரத்துடனும் பூஜையை நிறைவு செய்கின்றனர். அங்குள்ள ஆன்மிக நுாலகம் பக்தர்களுக்கு பயன்பாடாக உள்ளது. ஸ்ரீராமநவமி, நவராத்திரி, சிவராத்திரியன்று நடைபெறும் வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கோயில் நடைதிறக்கும் நேரம் அதிகாலை 4:30 -9:00 மணி.