லட்சியத்தில் உறுதிகொள்!
UPDATED : டிச 11, 2014 | ADDED : டிச 11, 2014
* காலத்தைப் பயனுடையதாக்குங்கள். ஒருபோதும் வீணாகக் கழிக்க முயலாதீர்கள். * எதை விரும்புகிறோமோ அதையே அடைகிறோம். எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சியடைகிறது. * அறிவு தான் ராஜா. மனம் அறிவுக்கு அடங்கியே நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கேடு தான் உண்டாகும். * துணிவுடன் செயலாற்றுங்கள். லட்சியத்தில் ஆணி அடித்தாற் போல பற்று கொள்ளுங்கள். * மனதில் பயத்தை வளர்ப்பவன் விஷம் கொண்ட பாம்பை வளர்ப்பது போல ஆபத்தை அடைவான். - பாரதியார்