உள்ளூர் செய்திகள்

நல்லறிவு வேண்டும் தாயே!

* சக்தித்தாயே! எங்கள் வாழ்வினை வளப்படுத்தும் நல்லறிவைத் தா. உலக மக்களை எல்லாம் காப்பாற்றும் வலிமையைக் கொடு. மன சஞ்சலம் போக்கிடும் தவக்கனலாய் என்னுள் எழு. விண்ணை அளக்கும் ஆற்றலையும், இன்பத்தையும் கொடு.* விதியையே மாற்றும் சக்திபடைத்த உமையவளே! என் உள்ளத்தில் ஒளிரும் ஒளிவிளக்கே! உலகம் முழுவதையும் படைத்தும், காத்தும் அருள் செய்பவளே! பயிரினைக் காக்கும் மழைபோல வந்து எங்களுக்கு பாதுகாப்பு கொடு.* சக்தி என்னும் நாமத்தை எங்கும் ஒலிக்கச்செய். உன் வடிவத்தைக் காணும் பாக்கியத்தைக் கொடு. உன்னை அறிந்தவர்களின் வாழ்வு சுடர்போல ஒளிமயமாகட்டும். உன் புகழ் பாடும் நாங்கள் புகழுடன் வாழ வழிகாட்டு. * சக்தித்தாயே! உன்னை நினைக்கும் மனிதர்களை தூக்க நிலையிலும் விழிப்போடு செயல்படச் செய். நீ இருக்குமிடத்தில் அன்பு நிலைத்திருக்கும். * உன்னை வணங்கும் எங்களது சோம்பலை நீக்கியருள். துணிவோடு செயல்படச் செய். எங்கள் பேச்சில் உண்மையும் தெளிவும் நிறைந்திருக்கச் செய். எப்போதும் உன் சிந்தையிலேயே இருக்கச்செய்.-பாரதியார்