உள்ளூர் செய்திகள்

வெற்றி மட்டுமே நமக்கு!

புத்தாண்டில், மீசைக்கவிஞர் பாரதியார் கூறும் அறிவுரைகளை மனதில் கொள்வோமா!* ''நாழிகைகள் கடந்தன. நாட்கள் நகர்ந்தன, பருவங்கள் மாறின. ஆண்டுகள் சென்றன. நான் மட்டும் மாறுபடமாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த மனம் ஆகியவற்றோடு இருப்பேன்,'' என்று ஒவ்வொருவரும் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.*அன்பு நம்மை வளர்த்துக் காக்கும். பிறகு வெற்றி மட்டுமே நமக்கு!*உலகில் உள்ள அனைத்துவிதமான இன்பங்களும் நமக்கு தேவை. அவற்றை பெறுவதற்கான அறிவுத்திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கலாம்.* உடம்பை வைரம்போல் உறுதி உடையதாகவும், பறவைகளைப்போல லாகவமுடையதாகவும், சிங்கத்தைப்போல வலிமையுடையதாகவும் செய்ய வேண்டும்.* நமக்கு தேவை நீண்ட ஆயுள், ஆரோக்கியமான உடல்நிலை, அறிவு, செல்வம். இவற்றை உங்கள் இஷ்ட தெய்வத்திடம் கேட்டுப் பெறுங்கள்.