இடைவிடா முயற்சி தேவை
* உழைப்பில் தான் சுகம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் உழைக்கத் தயங்கமாட்டார்கள். உழைப்பை உயிரெனக் கொள்ளுங்கள்.* கல்வி கற்கவும், ஆன்மிக வாழ்வில் ஈடுபடவும் வயது வரம்பு கிடையாது. ஆர்வமிருந்தால் எந்த பருவத்திலும் மேற்கொள்ளலாம்.* மதிப்புடன் வாழ்பவனுக்கு நேரும் அவமானம் மரணதண்டனையை விடக் கொடியது.* நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவ நினைப்பவர் உயர்ந்தவர். மற்றவர் எல்லாம் தாழ்ந்தவர். இந்த இரு பாகுபாட்டைத் தவிர உலகில் வேறு பாகுபாடும் கிடையாது.* கோபம் மனதைச் சூழ்ந்து கொண்டால், மனிதன் அறிவின் வழியில் செல்ல முடியாது.* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அன்பினால் தான் அன்பை உருவாக்க முடியும்.* சத்தியம் ஒன்று. அதனை ஆராதிக்கும் வழிமுறைகள் ஆயிரமாயிரம் உலகில் இருக்கின்றன.* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அவனால் அடைய முடியாத குறிக்கோள் என்று எதுவுமில்லை.- பாரதியார்