முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்
<P>* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேராக இருக்கிறது. அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சம் இருக்கும் இடத்தில் அறிவுக்கு வேலையில்லை. <BR>* எப்போதும் மலர்ந்த முகமும், இனிய சொல்லும், தெளிந்த உள்ளமும் கொண்டு வாழுங்கள். மலர்ந்த முகத்தோடு நம் பணிகளைச் செய்வதே வாழ்வின் பயனாக இருக்கிறது. <BR>* தன்னையே எரித்துக் கொண்டு கருவறையில் ஒளிபரப்பும் தீபம், ஆயுள் உள்ளவரை மனிதன் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அருங்குணத்தை நமக்குப் போதிக்கிறது.<BR>* நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், சேவகனாய் இருக்கிறான் இறைவன். அவனே அருளைத் தருகிறான். <BR>* கோபம் என்னும் இருள் சூழும்போது, நம்மால் பயனுள்ள எச்செயலையும் செய்ய முடியாது. ஆனால், நேசமோ நேசத்தை உண்டாக்கும். <BR>* தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது மண்ணுலகிற்கே நன்மை தருவதாக அமையும்.</P>