உள்ளூர் செய்திகள்

அமைதி தரும் வார்த்தை

* புயலுக்கு அசையாத உறுதியான பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சியைக் கண்டு மயங்காதவனே அறிஞன்.* பயனற்ற ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும், மனதிற்கு அமைதி தரும் ஒரே ஒரு வார்த்தையே மதிப்பு மிக்கது.* பகைமைக்கு நிகரான பாவம் இல்லை. மன அமைதிக்கு ஈடான இன்பம் இல்லை.* தீய செயல்கள் தொடக்கத்தில் தேன் போல இனித்தாலும், முடிவில் துன்பத்தையே கொடுக்கும்.* யானையை அங்குசத்தால் அடக்கி ஆள்வது போல, மனதையும் அடக்கி ஆள கற்றுக் கொள்ள வேண்டும்.- புத்தர்