உள்ளூர் செய்திகள்

மரம் போல் வளையுங்கள்

* உலகின் நான்கு திசைகளிலும் பிரயாணம் செய்தாலும், உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காண முடியாது. தர்மம் என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம்.* எல்லா மனிதர்களிடமும் இறைவன் இருக்கிறான். ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதனால் தான் மனிதர்கள் துன்பப்படுகின்றனர்.* பிறர் மீது குற்றம் கண்டுபிடித்துப் பொழுதைக் கழிப்பவன் தன் வாழ்நாளை விரயம் செய்தவன் ஆகிறான். * இறைவனை வெளியில் தேடுவது அறியாமை. தனக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவுடைமை.* கனிகள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல செல்வச்செழிப்பு மிக்க பணக்காரனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.* பணம் எவனுக்கு அடிமையோ, அவன் தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி உபயோகிப்பது என்பதை அறியாதவர்கள் மனிதனாக வாழத் தகுதியற்றவர்கள்.- ராமகிருஷ்ணர்