நம்பிக்கை வேண்டும்
UPDATED : பிப் 20, 2014 | ADDED : பிப் 20, 2014
* கடவுளிடம் நம்பிக்கை இல்லாததே துன்பத்திற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.* எண்ணத்திற்கும், பேச்சிற்கும் ஒற்றுமை இருந்து விட்டால் போதும். வேறு எந்தச் சாதனையும் தேவையில்லை.* உடலைப் பெற்று விட்ட உயிர்கள் அனைத்திற்கும் இன்பம், துன்பம் வந்தே தீரும். * முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப இந்த பிறவியில் வாழ்வின் போக்கு அமைகிறது.* பக்தியுடன் கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள். எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.- ராமகிருஷ்ணர்