உள்ளூர் செய்திகள்

நமது எஜமானர் யார்?

* கடவுள் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். ஆனால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவரைத் தரிசிக்க முடியும்.* பொன், பெண், மண் ஆகிய மூவாசைக்கு மனதில் இடம் கொடுத்தால் ஆன்மிக யோகம் ஒருபோதும் கைகூடாது.* கடவுளே உலகின் ஒரே எஜமானர். நாம் அனைவரும் அவரின் பணியாளர்கள். அவருக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.* ஆராய்ச்சி அறிவால் கடவுள்தரிசனத்தைப் பெற முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே தேவை.* தீயவாசனை மனதில் இருக்கும் வரையில் தூய்மையான பக்தி உண்டாகாது. பக்தி செலுத்துவதே வாழ்வின் சாராம்சம்.* உருவமற்ற கடவுளை தியானம் செய்வது மிகக் கடினமான செயல். அதற்காகவே உருவநிலையில் வழிபாடு செய்கிறோம்.* கள்ளம் கபடமில்லாத மனம் படைத்தவர்கள் கடவுளின் அருளை எளிதில் பெற்று மகிழ்கிறார்கள்.* பேராசை, காமம், கோபம் போன்ற துர்க்குணங்கள் கடவுளை அறிந்த பிறகே நம்மை விட்டு அகலும்.- ராமகிருஷ்ணர்