உள்ளூர் செய்திகள்

புத்திசாலியாக மாறி விடு

* இங்கிதம் தெரியாத மனிதன் வாழ்வில் துன்பத்திற்கு ஆளாவான். சூழ்நிலைக்கு ஏற்ப மாறத் தெரிந்தவனே புத்திசாலி. * மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பவனே.வாழ்வில் எல்லா சுகமும் பெறுவான். * நீ பக்திமானாக இரு. கடவுளை நம்பு. ஒருவராலும் உன்னைத் துன்புறுத்த முடியாது. * யார் மீதும், எப்போதும் வெறுப்பு காட்டாதே. மீறினால் கடவுளின் வெறுப்புக்கு ஆளாவாய். * எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். * சொர்க்கமும், நரகமும் எங்கோ இருப்பதாக தவறாக நினைக்காதே. மனமே அதனை உருவாக்குகிறது. -சாந்தானந்தர்