இல்லாத இடமே இல்லை
* மனத்தூய்மை, பொறுமை, அன்பு, நேர்மை ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.* கடவுளை சத்தியமாக நம்புபவன் வாழுமிடம் சொர்க்கமாகத் திகழும். விடாப்பிடியாக கடவுளைப் பற்றிக் கொண்டால், வெற்றி தேடி வரும். * ஒருபோதும் சோம்பித் திரியாதீர்கள். செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுங்கள். சிரத்தையோடு கடமையாற்றுபவன் லட்சியத்தை நோக்கி முன்னேறுவான்.* புத்திசாலிகள் அறியாமையில் தவிப்பவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. பிறரை வெறுப்பவன் அறிஞனாக முடியாது. * கடவுள் இல்லாத இடமே இல்லை. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து விட்டால் உலகம் உன்னை போற்றும். * விருப்பு, வெறுப்பு இரண்டும் நரகத்தின் வாசல்கள். சத்தியத்தின் வடிவமான கடவுள் விருப்பு வெறுப்பவற்றவராகத் திகழ்கிறார்.* கடவுளைக் காண முதலில் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவரே உங்களுக்குள் காட்சி தருவார்.-சாந்தானந்தர்