நினைத்தாலே மணக்கும்
UPDATED : ஜூலை 05, 2015 | ADDED : ஜூலை 05, 2015
* உங்களுக்கு இருக்கும் திறமையும், செல்வமும், பலமும் பிறருக்கு நன்மை தரும் விதத்தில் அமையட்டும். * கடமையில் அக்கறையுடன் ஈடுபடுங்கள். உள்ளமும், உடலும் ஆரோக்கியம் பெற இதுவே சிறந்த வழி.* சந்தனத்தை தொட்ட கையில் மணம் கமழும். கடவுளை நினைக்கும் மனதில் தெய்வீகம் கமழும். * குடும்பத்திற்காகப் பணம் தேடுவதில் தவறில்லை. ஆனால், அதிலும் ஒரு வரையறை இருப்பது நல்லது.* யாரையும் அவமதிக்காதீர்கள். உலகில் அற்பமான மனிதர் என்று யாரும் கிடையாது.-சாரதாதேவியார்