தகுதியானவர்க்கே வாய்ப்பு
UPDATED : டிச 21, 2015 | ADDED : டிச 21, 2015
*கடவுளைக் காண அனைவரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கே வாய்ப்பு கிடைக்கிறது.* சுகமும் துக்கமும் வெளியுலகில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். அது அவரவர் மனதிலேயே இருக்கிறது.* அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந்தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்.* இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்பமாகவும் மாறலாம். துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும்.*பிறருக்காக உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.-ஷீரடி பாபா