எளிமையாக வாழ்வோம்
UPDATED : ஆக 11, 2016 | ADDED : ஆக 11, 2016
* உணவு, உடைக்காக கடின முயற்சியில் ஈடுபட வேண்டாம். எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.* கடவுள் ஒருவரே உலகில் எல்லாம் அறிந்தவர். அவருடைய பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாது.* போலி கவுரவத்தால் மனிதன் வழி தவறி நடக்கிறான். மனம் பக்தியில் ஈடுபட்டால் நேர்வழியில் நடக்க முடியும்.* நல்லதோ கெட்டதோ அவரவர்க்குரிய முன்வினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்.- ஷீரடி பாபா