அன்பை வழங்குங்கள்
UPDATED : பிப் 15, 2016 | ADDED : பிப் 15, 2016
*நாம் ஒவ்வொருவரும் தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.* கடமைக்காக வழிபாடு செய்யக்கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.*எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.* புத்திசாலித்தனத்தால் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும்.-ஸ்ரீ ரவிசங்கர்ஜி