வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்
UPDATED : பிப் 10, 2017 | ADDED : பிப் 10, 2017
* தினமும் காலையில் எழுந்ததும் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று அனைவரையும் வாழ்த்துங்கள்.* எந்த சூழ்நிலையிலும் கோபம் வராதவனாக மாறிவிட்டால், அவன் ஞானம் அடைந்து விட்டதாகப் பொருள்.* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.* விழிப்புடன் இருந்தால் மட்டுமே மனதில் தவறான எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்க முடியும்.- வேதாத்ரி மகரிஷி