நல்லதைப் பேசு
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
அடுத்த வீட்டாரை பொறாமையுடன் பார்ப்பதும், அவர்களிடம் பணம், பொருள் என கேட்டு நச்சரிப்பதும் பெருகிவிட்டது. அடுத்த வீட்டாரைச் சந்தித்தால் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது அல்லது குறை சொல்வது வழக்கமாகி விட்டது. இது பற்றி நபிகள் நாயகம், ''இறுதிநாளையும் நம்பியவர்கள் அண்டை வீட்டாருக்கு சிரமம் தர மாட்டார்கள். அவர்கள் தன் விருந்தினரை கண்ணியமாக நடத்துவர். இவர்களின் நாக்கு நல்லதை பேசட்டும். இல்லாவிட்டால் மவுனமாக இருக்கட்டும்” என்கிறார்.