இம்மையின் இன்பம்
UPDATED : ஜன 12, 2024 | ADDED : ஜன 12, 2024
மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இன்பங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இறைவழியை மறந்துவிட்டு இன்பத்தில் வாழ்க்கையை கழிப்பது தவறு. இதற்கு குறுக்கே நிற்பவை அனைத்தையும் வெறுக்க வேண்டும். இறைவன் இம்மையை வெறுப்பதால் மனிதர்களில் சிலரும் அதை வெறுக்கிறார்கள். அது எல்லா விதத்திலும் அழகாகவும், தித்திப்பையும் தருகிறது. இதனால் வரும் விளைவு என்ன? மரணத்தின்போது உலகை விட்டுப் பிரிவதற்கு மனம் இடம் தர மறுக்கிறது. கடந்த கால இன்பங்களை நினைத்து வேதனைப்படுகிறது. எனவே இம்மையின் இன்பங்களை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.