யாருக்காக பாடுபடுவது?
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் ஒருவர் பாடுபட வேண்டும். அவர் இறைவனின் வழியில் நடப்பவருக்கு ஒப்பாவார். அவரை இரவு முழுவதும் தொழுபவருக்கும், நோன்பு நோற்பவருக்கும் சமமாக இறைவன் பார்க்கிறான். * ஏழைகளிடம் இரக்கம் கொள்வோர் மீது அவன் இரக்கம் கொள்கிறான். * பூமியிலுள்ளோர் மீது இரக்கம் காட்டினால், அவன் உங்கள் மீது இரக்கம் கொள்கிறான். * அவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.