உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ஓட்டு எண்ணும் மையத்தில் குடிநீர் வசதி: தினமலர் செய்தி எதிரொலி

ஓட்டு எண்ணும் மையத்தில் குடிநீர் வசதி: தினமலர் செய்தி எதிரொலி

காரைக்குடி : லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு தினமலர் செய்தி எதிரொலியால் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.இங்கு 6 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் துணை ராணுவம், பட்டாலியன், உள்ளூர் போலீசார் என 300 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, குடிநீர் மற்றும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி செய்து தர ப்படவில்லை என புகார் எழுந்தது.இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ஓட்டு எண்ணும் மையத்தை சிவகங்கை எஸ்.பி., டோங்க்ரே பிரவீன் உமேஷ் பார்வையிட்டு, கூடுதலாக சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். மேலும், தடையின்றி கழிப்பறைகளில் தண்ணீர் வசதி செய்து தர உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை