மின் கம்பிகள் சீரமைப்பு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் மின்கம்பங்கள் சாய்ந்தும் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாகவும் சென்றன. குடியிருப்பு பகுதிகளில் வீடுகளையொட்டி தாழ்வாக சென்றதால் விபரீதம் ஏற்படும் நிலை இருந்தது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தனர்.